சுற்றுச் சூழலின் முக்கியத்துவம் மற்றும் அதன் மகத்துவமும்.!
சுற்றுச் சூழலின் முக்கியத்துவம் மற்றும் அதன் மகத்துவமும்.!

புவி என்பது நிலம், நீர், காற்று, வானம் ஆகிவற்றின் ஒட்டுமொத்த உருவம் அமைப்பாகும். இவற்றில் ஏதேனும் ஒன்றில் மாற்றம் ஏற்பட்டாலும், அமைப்புகளின் சமநிலையை பாதிக்கும். சுற்றுச்சூழல் எப்பொழுதும் வருகிறது. இவ்வாறு மாறி வரும் சுற்றுச்சூழல் உயிரினங்களுக்கு மட்டுமின்றி மனிதனையும் பாதிக்கும்.
உலகில் நிகழும் பல்வேறு வகை மாசுபாட்டிற்கு அடிப்படை ஆதாரம் மனிதனுடைய செயல் என்று கூறினால் மிகையாகாது. 'யானை தன் தலையில் தானே மண் வாரி இறைத்துக் கொள்வது போல' சுற்றுச் சூழலின் முக்கியத்துவம் அறியாமல் மனிதன் செயல்படுத்தக்கூடிய ஒவ்வொரு செயலும் அவனது குலத்திற்கு எதிரானது என்பதை அவன் இன்னும் அழியவில்லை. அரசன் அன்று கொல்வான். ஆனால் மாசு இன்றே கொள்ளும் என்பதை மனிதன் அறியவில்லை.
சுற்றுச்சூழல் மாசுபாடு இதற்கு முதல் காரணம் மனிதனுடைய சுயநலம்தான். வீட்டை பெருக்கி குப்பைகளை வீதியில் கொட்டுகிறான்.மூன்றாம் தலைமுறை வாரிசுக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்று நினைக்கும் மனிதன், மூன்றாவது தலைமுறை வாரிசு வாழப்போகும் அக்காலத்தில் சூழ்நிலையை எவ்வாறு கொள்ளும் எதிரியாக மாறும் என்பதையும் அவன் இன்னும் அறிந்து கொள்ளவில்லை.
தற்போது வளர்ச்சியடைந்த நாடுகளின் பங்கு உலக வாணிபத்தில் அதிகரித்து வருகின்றன. ஆகையால் மாசுபாட்டினால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஜூன் 5 ஆம் தேதி 'உலக சுற்றுச்சூழல் தினமாக' அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளை தான் பொருட்களின் உற்பத்தி செலவு அதிகரிக்கிறது. நீர் மாசுபாட்டினால், தண்ணீர் சுத்திகரிப்பு அதற்கான கூடுதல் செலவாகிறது. இதனால் பொருட்களின் விலை அதிகரிக்கும். மேலும் மாசுபாட்டினால் பொருட்களின் தரமும் குறையத் தொடங்குகிறது.