Kathir News
Begin typing your search above and press return to search.

உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய இந்தியாவை பிரதிபலிக்கும் நினைவு பரிசுகள்

இந்தோனேஷியாவில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர் களுக்கு இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி பல நினைவு பரிசுகளை வழங்கினார்

உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய இந்தியாவை பிரதிபலிக்கும் நினைவு பரிசுகள்

KarthigaBy : Karthiga

  |  17 Nov 2022 6:30 AM GMT

இந்தோனேஷியாவில் 'ஜி-20' உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்களுக்கு இந்தியாவின் சார்பில் நாட்டின் கலாச்சார செழுமையை பாரம்பரியத்தை பறைசாற்றும் கலைப் படைப்புகளை பொருட்களை பிரதமர் மோடி நினைவு பரிசுகளாக வழங்கினார். இது பற்றிய சுவாரசிய தகவல்கள் வருமாறு:-


*அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு 'சிருங்கர் ராசாவை' சித்தரிக்கும் காங்க்ரா மினியேச்சர் ஓவியங்களை பிரதமர் மோடி வழங்கினார்.

*இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு வழங்கிய நினைவு பரிசு குஜராத்தில் பெண் தெய்வ கோவில்களுக்கு காணிக்கையாக வழங்குகிற கைத்தறி ஆடை ஆகும்.

*ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீசுக்கு அவர் தந்தது, குஜராத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைப்பொருளான பித்தோரா. இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா பிரதமர் மோடி வழங்கிய பரிசு,'படன் படோலா' துப்பட்டா ஆகும்.

*பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்ககோல்ஸ்,சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் ஆகியோருக்கு நினைவு பரிசாக தந்தது குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய கைவினை பொருளான 'அகேட்' கிண்ணங்கள் ஆகும்.

*ஜி - 20 உச்சி மாநாட்டை நடத்திய இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவுக்கு குஜராத்தின் சூரத் நகரின் திறமையான தொழிலாளிகளால் செய்யப்பட்ட தனித்துவமான நேர்த்தியான வேலைபாடு கொண்ட வெள்ளி கிண்ணம் , இமயமலை பகுதியில் சிறப்பு வாய்ந்த கின்னவுர் சால்வை ஆகியவற்ற பிரதமர் மோடி வழங்கினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News