மறுபடியும் காங்கிரஸ் தலைவர் ஆகிறாரா ராகுல் காந்தி? காங்கிரஸ் எம்பிக்கள் கோரிக்கை.! #Congress #RahulGandhi
மறுபடியும் காங்கிரஸ் தலைவர் ஆகிறாரா ராகுல் காந்தி? காங்கிரஸ் எம்பிக்கள் கோரிக்கை.! #Congress #RahulGandhi

காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் இந்த விஷயத்தை எழுப்பிய சில நாட்களுக்குப் பிறகு, ராகுல் காந்தியை மீண்டும் கட்சித் தலைவராக்க காங்கிரஸில் கோரஸ் சத்தமாக வளர்ந்துள்ளது போல் தெரிகிறது.
சனிக்கிழமை (ஜூலை 11) கட்சி MP க்களின் வீடியோக் கூட்டத்தில், கலந்துரையாடலின் போது ராகுல் காந்தி அமைதியாக இருந்தபோதும் இந்த விவகாரம் கூட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
காந்திக்கு நெருக்கமான கட்சி எம்.பி.க்கள் கவுரவ் கோகோய் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் ராகுல் காந்தியை மறுபடியும் தலைவராக்க கட்சித் தலைமையைக் கேட்டுக்கொண்டனர்.
ஜூன் மாதம் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கெஹ்லாட், ராகுல் காந்தி கட்சிக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று கோரினார்.
சனிக்கிழமை கூட்டத்திற்கு முன்னதாக, மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரின் தலைமையின் கீழ் கட்சி அமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான சவாலை கட்சித் தலைமை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரையும் எதிர்கொள்ள 'தைரியம்' இவர்கள் இருவருக்கு மட்டுமே உண்டு என்று கூறினார்.
"கட்சி அமைப்பை செங்கல் செங்கலாக கட்டும் சவாலை காங்கிரஸ் தலைமை ஏற்க வேண்டும். இங்குதான் ராகுல் ஜி மற்றும் பிரியங்கா ஜி ஆகியோரின் சுறுசுறுப்பு நமக்குத் தேவை. மோடி-ஷா இரட்டையர்களைப் எதிர்ப்பதற்கான தைரியம் அவர்கள் இருவருக்கும் இருப்பதாக நான் நம்புகிறேன்." என்று அவர் தொடர்ச்சியான ட்வீட்டுகளில் கூறினார்.
இதனால் பாஜக தொண்டர்கள் அதிக மகிழ்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது. (?!) ராகுல் காந்தி பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளர் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் ராகுல் காந்தி எந்த நேரத்திலும் பதவிக்கு திரும்ப மாட்டேன் என்று கூறுகிறார். "நீங்கள், அந்த பிரச்சினையில் ஒரு வருடம் முன்பு நான் எழுதிய எனது கடிதத்தைப் படியுங்கள்" என்று அவர் கடந்த மாதம் தலைப்பில் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.
2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் நொறுக்கப்பட்டதை அடுத்து ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.