Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை - சிவன் கோயிலில் பணம் மற்றும் சிலைகளை திருடிய மர்ம நபர்கள்!

வாலாஜா அருகே உள்ள சிவன் கோயிலில் செப்புப் பொருட்கள், பணம் மற்றும் நாணயங்கள் திருடப்பட்டுள்ளன.

சென்னை - சிவன் கோயிலில் பணம் மற்றும் சிலைகளை திருடிய மர்ம நபர்கள்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 Jun 2022 2:11 AM GMT

தற்போது பல்வேறு கோவில்களில் குறிப்பாக இந்து கோவில்கள் தொடர்ச்சியாக மர்ம நபர்கள் அட்டூழியம் காரணமாக பொருட்கள் திருடப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது சென்னை வாலாஜா நகரை அடுத்துள்ள வன்னிவேடு கிராமத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலில் உள்ள அரியவகை செப்புப் பொருட்கள், சிசிடிவி கேமராக்கள், ரொக்கம், நாணயங்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருடப்பட்டன. இதன் காரணமாக இந்தப் பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



காலை 6 மணியளவில், கோயில் நிர்வாகத்தினர் காலை பூஜைகளுக்காக வளாகத்தைத் திறக்க வந்தபோது, ​​கோயிலின் பிரதான கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். பதிவு அறையில் இருந்த இரும்பு அலமாரிகள் சூறையாடப்பட்டன. அரிய செப்பு கலைப்பொருட்கள் மற்றும் சிலைகள் காணவில்லை. ஹண்டியலும் கொள்ளையடிக்கப்பட்டது. கருவறையில் இருந்த சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.


உடனே கோவில் நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் கோவிலின் அருகில் உள்ள பல்வேறு இடங்களை போலீசார் விசாரணை செய்து பார்ப்பதாகவும் ஏதேனும் சந்தேகப்படும் நபர்கள் தென்பட்டால் உடனடியாக போலீசாரிடம் தகவல் கொடுக்குமாறு தற்போது கூறப்பட்டது.

Input & Image courtesy: The Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News