Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா தடுப்பூசி இந்தியா மாபெரும் சக்தியாக உள்ளது: உண்மையை ஒப்புக்கொண்ட அமெரிக்கா!

கொரோனா தடுப்பூசி கண்டுப்பிடித்து அதன் உற்பத்தியில் மிகப்பெரிய சக்தியாக இந்தியா விளங்குகிறது என்று அமெரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி இந்தியா மாபெரும் சக்தியாக உள்ளது: உண்மையை ஒப்புக்கொண்ட அமெரிக்கா!

ThangaveluBy : Thangavelu

  |  24 Oct 2021 3:00 AM GMT

கொரோனா தடுப்பூசி கண்டுப்பிடித்து அதன் உற்பத்தியில் மிகப்பெரிய சக்தியாக இந்தியா விளங்குகிறது என்று அமெரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதி கழகம், அந்நாட்டின் மேம்பாட்டு வங்கி ஆகும். இது உலகெங்குள் பல்வேறு நாடுகளில் முதலீடுகளை செய்து வருகிறது. இதன் தலைமைச் செயல் அதிகாரி டேவிட் மார்சிக், உயர்மட்ட தூதுக்குழுவுடன் இன்று (அக்டோபர் 24) இந்தியா வருகிறார். இங்கு 26ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்தியா வரும் நிலையில், கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தியது மட்டுமின்றி தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா பெரும் சக்தியாக திகழ்ந்து வருகிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் பேசும்போது, இந்தியா தடுப்பூசி உற்பத்தியில் மாபெரும் சக்தியாக உள்ளது. அந்நாட்டுடன் இணைந்து அமெரிக்கா மக்களின் உயிர்களை காப்பாற்றுகிறது. 2.3 பில்லியன் டாலருக்கு அதிகமான முதலீட்டில் இந்தியா மிக முக்கியமான மிகப்பெரிய கூட்டாளி என்ற அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Daily Thanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News