Kathir News
Begin typing your search above and press return to search.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 'இலவச லேப்டாப் 'கேட்கும் வழக்குக்கு பதில் அளிக்க வேண்டும் - தி.மு.க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச 'லேப்டாப்' கேட்கும் வழக்குக்கு பதில் அளிக்க வேண்டும் என்று அரசுக்கு ஹை கோர்ட் உத்தரவு விடுத்துள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கேட்கும் வழக்குக்கு பதில் அளிக்க வேண்டும் - தி.மு.க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.

KarthigaBy : Karthiga

  |  13 Oct 2022 9:45 AM GMT

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் கற்பகம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச லேப்டாப்கள் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 2021-2022ஆம் கல்வி ஆண்டில் 5 இலட்சத்து 32 ஆயிரம் லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.ஆனால் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு லேப்டாப்கள் வழங்கப்படவில்லை. எனவே மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு இலவச லேப்டாப்பை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.


இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா நீதிபதி டி. கிருஷ்ணகுமார் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் தரப்பில் வக்கீல் பிரபாகரன் ஆஜராகி வாதிட்டார். அதை அடுத்து நீதிபதிகள் இலவச லேப்டாப் திட்டம் அமலில் இருந்தால் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் அதை வழங்கலாமே என்று கருத்து கூறினர். பின்னர் இந்த வழக்குக்கு தமிழ்நாடு அரசு இரு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News