Kathir News
Begin typing your search above and press return to search.

உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய குரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி!

உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய குரூஸ் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய குரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி!

KarthigaBy : Karthiga

  |  20 April 2024 3:05 AM GMT

உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய குரூஸ் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. ஒடிசா மாநில கடற்கரை பகுதியில் உள்ள சாந்திப்பூர் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை மையத்தில் இருந்து இந்த நீண்டததூர இலக்கை தாக்கி அடிக்கும் குரரூஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு டி ஆர் டி ஓ அதிகாரிகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாந்சிங் பாராட்டு தெரிவித்தார்.இதுகுறித்து டி ஆர் டி ஓ வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட உந்து சக்தி தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த குரூஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சியில் மிகப்பெரிய மைல்கள் ஆகும். இந்த ஏவுகணையின் செயல்பாடுகள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட ரேடார் உள்ளிட்ட கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. இந்திய விமானப்படையில் 'சு-30 எம்.கே1' விமானத்தில் இருந்த படியும் ஏவுகணையின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டது. அதன் மூலம் திட்டமிட்ட பாதையில் எந்தவித விலகலும் இன்றி ஏவுகணை செல்வது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த ஏவுகணை பெங்களூரில் உள்ள டி.ஆர் டி.ஓஆய்வகத்தில் மேம்படுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


SOURCE :Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News