Kathir News
Begin typing your search above and press return to search.

விண்வெளிக்கு மனிதர்களை அழைத்து செல்லும் கிரையோஜெனிக் இயந்திர திறன் பரிசோதனை வெற்றி!

விண்வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்லும் கிரையோஜெனிக் இயந்திர திறன் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

விண்வெளிக்கு மனிதர்களை அழைத்து செல்லும் கிரையோஜெனிக் இயந்திர திறன் பரிசோதனை வெற்றி!

KarthigaBy : Karthiga

  |  22 Feb 2024 11:48 AM GMT

இந்தியா விண்வெளி துறையில் பல அரிய சாதனைகளை படைத்துள்ளது. நிலவுக்கு சந்திரயான் விண்கலம் சூரியனுக்கு ஆதித்யா எல்- ஒன் விண்கலம் ஆகியவற்றை அனுப்பி ஆய்வு செய்து வருகிறது .இதேபோன்று விண்வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்லும் ககன்யான் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.இந்த திட்டத்தின் நோக்கம் மனிதர்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அனுப்பி அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு திருப்பி கொண்டு வருவது ஆகும். நடப்பாண்டில் இலக்கை அடைவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன .இந்த திட்டம் வெற்றி அடைந்தால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவெடுக்கும்.


இந்த நிலையில் விண்வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்லும் கிரயோஜெனிக் இயந்திர பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது. இதனால் ககன்யான் திட்டத்தில் பெரிய மைல்கல்லை நாம் எட்டியுள்ளோம் .இது பற்றி இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில் இஸ்ரோவின் சி-20 கிரையோஜெனிக் இயந்திரம் தற்போது ககன்யான் திட்டங்களுக்காக விண்வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்லக்கூடிய திறன் பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.


கடுமையான பரிசோதனைகள் இயந்திரத்தின் உறுதி தன்மையை நிரூபித்துள்ளது. முதல் ஆளில்லா விமானம் எல்.வி.எம்-3 ஜி-1 காக அடையாளம் காணப்பட்ட சி.இ-20 இயந்திரம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பரிசோதனைகளை கடந்து வந்துள்ளது. அதிக உயரத்தில் பரிசோதனை செய்வதற்கான வசதி கொண்ட மகேந்திரகிரியில் இறுதி பரிசோதனை நடந்தது. ஏழாவது முறையாக நடந்த இந்த தொடர் பரிசோதனை படி வெற்றிடத்தில் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் இயந்திரமானது வெப்ப படுத்தி பார்க்கப்பட்டது. அது பறக்கும் நிலையை தூண்டுவதற்கானது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.


இதேபோன்று சி.இ.20 இயந்திரம் மனிதர்களை சுமந்து செல்வதற்கான தரைப்பகுதி தகுதி பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. அதில் உயிர் வாழ்வதற்கான விளக்கப் பரிசோதனைகளும் நடந்தன. நீடித்து உழைக்கக்கூடிய பரிசோதனைகள் மற்றும் செயல்பாட்டு திறன் பரிசோதனை குறைந்த அளவிலான இயக்கத்தின் கீழ் அதன் செயல்பாடு என அனைத்து தரைவழி பரிசோதனைகளும் நிறைவடைந்து .அதில் வெற்றியும் கிடைத்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News