Kathir News
Begin typing your search above and press return to search.

சி.எஸ்.ஐ பள்ளி வளாக நிலப் பிரச்சினை: நில மீட்பு இயக்கம் சிறப்பு பூஜை!

சி.எஸ்.ஐ பள்ளி வளாகம் உள்ள பிரச்சினைகள் தீர்ப்பு தற்போது அளிக்கப்பட்டு, நில மீட்பு இயக்கம் சிறப்பு போற்றி நடத்தப்பட்டு இருக்கிறது.

சி.எஸ்.ஐ பள்ளி வளாக நிலப் பிரச்சினை: நில மீட்பு இயக்கம் சிறப்பு பூஜை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 Dec 2022 9:14 AM GMT

ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் அமைந்துள்ளது தான் சிஎஸ்ஐ பள்ளி வளாகம். இந்த பள்ளி வளாகத்தில் உள்ள நிலம் தொடர்பான பிரச்சனையின் தீர்ப்பு வெள்ளிக்கிழமை வெளியானதால் நில மீட்பு இயக்கம் சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு இருக்கிறது. ஈரோடு மீனாட்சிசுந்தரனார் சாலையில் இருந்து ரயில் நிலையம் வரை செல்லும் 80 அடி சாலையில் 12.66 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்நிலத்தின் மீட்டர் கோரி ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் இளமைப்பு இயக்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன.


இந்த நிலையில்தான் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது என்றும், அவரிடத்தில் சாலை திட்டத்தை நிறைவேற்றக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். இந்நிலை காரணமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் என்றும் 80 அடி சாலை திட்டத்தை செயல்படுத்த தடை இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கி இருக்கிறது.


இதனால் நிலமைப்பு இயக்கம் சார்பில் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு பூஜை நடத்தி பக்தர்களுக்கு இனிப்பு பொருட்கள் வழங்கப்பட்டது. நில மீட்பு இயக்கத்தாலே துணைத் தலைவர் கைலாசபதி ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் மற்றும் இந்து முன்னணி மாநில பொருளாளர் பொருளாளர் ஆகியோர் உடன் இருந்து இதில் பங்கேற்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News