கள்ளச்சாராய வியாபாரிகளுடன் 'டீலிங்' - காவல்துறை ஆய்வாளர் பணி இடைநீக்கம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வியாபாரிகளுடன் தொடர்பு இருந்ததாக காவல்துறை ஆய்வாளர் பண்ணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
By : Mohan Raj
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வியாபாரிகளுடன் தொடர்பு இருந்ததாக காவல்துறை ஆய்வாளர் பண்ணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது, பல கிராமங்களில் கள்ள சாராயத்தை ஒரு குழு விற்பனை செய்வதற்கு ஏலம் விடப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த கள்ளச்சாராய விற்பனை ஒரு சில காவல்துறை அதிகாரிகளின் அனுமதியுடனே நடப்பதால் பல ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை கொடி கட்டி பறந்து வருகிறது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது, 'அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாரத்தை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. காவல்துறை அதிகாரிகள் காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சிக்கு உட்பட்ட சின்ன சேலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் என்பவர் சாராயக்கடை நடத்தி வருபவர்களிடம் ரகசிய தொடர்பில் இருந்து வந்ததால் அவரை மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரி ஒருவரே கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போனது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.