Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லியில் பெண்ணை கடத்தி கூட்டாக கற்பழிப்பு - சொத்து பிரச்சனையால் நிகழ்ந்த கொடூரம்!

டெல்லியில் பெண் ஒருவரை கடத்து கூட்டாக கற்பழிப்பு சொத்து பிரச்சனைகள் காரணமாக கொடூரம் நிகழ்த்திய கும்பல்.

டெல்லியில் பெண்ணை கடத்தி கூட்டாக கற்பழிப்பு - சொத்து பிரச்சனையால் நிகழ்ந்த கொடூரம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 Oct 2022 6:26 AM GMT

டெல்லியை சேர்ந்த நிர்பயா என்று இளம் பெண் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி உடும்பஸில் ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கற்பழித்த சித்திரபாதை செய்யப்பட்டு பஸ்ஸிலிருந்து தூக்கி வீசப்பட்டார். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி இரண்டு நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் உயிரிழந்தார். நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் இந்திய மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியில் ஏற்படுத்தி இருந்தது. அதேபோல மற்றொரு சம்பவம் தான் தற்போது டெல்லியில் அரங்கேறியுள்ளது. டெல்லியை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் ஐந்து பேர் கும்பலால் சீரழிக்கப்பட்டு பலவித சித்திரவாதிகளுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். நந்தகிரி பகுதியைச் சேர்ந்த இந்த பெண்ணுக்கும், வேறு சிலருக்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்தது. இந்த விவகாரம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.


இந்நிலையில் தான் இந்த பெண் தனது சகோதரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்குபெற இருப்பதற்காக கடந்த வாரம் குரு கிராம் சென்றுள்ளார். இது முடிந்து திரும்பி வரும்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி சென்றுள்ளது. டெல்லியின் எல்லைப் பகுதியான காசியில் பார்த்துக் கொண்டு சென்று அந்த கும்பல் பின்னர் மாறி, மாறி கற்பழித்து இருக்கிறார்கள். பின்னர் பெண்ணின் கை கால்களை கட்டி ஒரு சாக்கு மூட்டையில் கட்டி நேற்று அதிகாலையில் சாலையோரம் விஷி உள்ளார்கள். அந்த பெண்ணை பார்த்த போது நபர்கள் போலீஸில் அவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.


மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடூரத்தை குறித்து கொடுத்த தகவல்களின் பெயரில் உடனடியாக போலீஸ் விசாரணையை நடத்தினார்கள். அத்துடன் அவர்களை கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டது. இதன் பலனாக இந்த கும்பலை சேர்ந்த 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். சொத்து தகராறு பெயரில் இந்த கொடூரத்தை அரங்கேற்றது முதற்கட்ட விசாரணையில் தெரியும் வந்துள்ளது.

Input & Image courtesy: Maalaimalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News