Kathir News
Begin typing your search above and press return to search.

4 கிலோமீட்டர் தூரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் - ஏழுமலைவாசனை காண நிரம்பி வழியும் திருமலா

திருப்பதியில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் திணறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

4 கிலோமீட்டர் தூரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் - ஏழுமலைவாசனை காண நிரம்பி வழியும் திருமலா

Mohan RajBy : Mohan Raj

  |  12 Jun 2022 11:44 AM GMT

திருப்பதியில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் திணறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு தினமும் குறைந்தபட்சம் 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர் திருமலை திருப்பதியில்.

இரண்டு ஆண்டுகளுக்கு கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஏழுமலையானை பார்க்க கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது தளர்த்தப்பட்டு இருக்கும் விதிமுறைகளால் கோடை விடுமுறை நாளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவஸ்தான அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பி பக்தர்கள் நான் வழிகிறது 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு தரிசனத்திற்காக காத்து நிற்கின்றனர் பக்தர்கள்.

நேற்று திருப்பதியில் 87,698 பேர் தரிசனம் செய்தனர், 48,084 பேர் முடி காணிக்கை செலுத்தினர், 3.88 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News