Kathir News
Begin typing your search above and press return to search.

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டுமே சாத்தியம் - உள்துறை மந்திரி அமித்ஷா!

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி வேண்டுமானால் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டுமென்று அமித்ஷா கூறியுள்ளார்.

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டுமே சாத்தியம் - உள்துறை மந்திரி அமித்ஷா!

KarthigaBy : Karthiga

  |  26 April 2024 11:28 AM GMT

அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் என மதிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ வேட்பாளர் ரகுநந்தர் ராவை ஆதரித்து தேர்தல் பேரணியில் அமித்ஷா பேசியதாவது:-

சமீபத்தில்தான் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவை டில்லியின் ஏ.டி.எம் ஆக்கியுள்ளது. காலேஸ்வரம் திட்டம் அல்லது நில மோசடி தொடர்பாக பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சிக்கு எதிராக காங்கிரஸ் விசாரணை மேற்கொள்ளவில்லை. நீங்கள் ஓட்டளித்து மோடி மூன்றாவது முறையாக பிரதமராகிய பிறகு ஊழலில் இருந்து தெலுங்கானாவை விடுவிப்பார்.

தெலுங்கானாவில் ஊழலற்ற ஆட்சியை வழங்குவதும் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வதும் பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும். இந்த முறை தெலுங்கானா மக்கள் பிரதமர் மோடியின் பக்கம் உள்ளனர். எல்லா இடங்களிலும் பா.ஜ வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய தெலுங்கானா மக்கள் முடிவு செய்துள்ளனர். ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம். அதனை எஸ்.சி , எஸ்.டி, பி.சி உள்ளிட்ட பிரிவினருக்கு பகிர்ந்து அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News