ஏழுமலையானை தரிசிக்க 40 மணி நேரம் - திருமலையில் குவிந்த பக்தர்கள்
அடாது மழை பெய்தாலும் திருப்பதியில் கூட்டம் குறைவதே இல்லை.
By : Mohan Raj
அடாது மழை பெய்தாலும் திருப்பதியில் கூட்டம் குறைவதே இல்லை.
பக்தர்கள் 40 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது, கடந்த மூன்று நாட்களாக விடாது மழை பெய்தும் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறையவில்லை.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி தரிசனத்திற்காக 40 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 300 ரூபாய்க்கு டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக டோக்கன் வாங்கி பக்தர்கள் காத்திருந்தே ஏழுமலையான் தரிசித்து செல்கின்றனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்த காரணத்தினால் அங்கு தங்கும் விடுதிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மழை பெய்து வருவதால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது பக்தர்களுக்கு இருப்பினும் கூட்டம் குறைவதாக இல்லை. ஏழுமலையானை தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.