Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை: வடபழனி கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் சிறப்பம்சம்!

சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் சிறப்பம்சம்.

சென்னை: வடபழனி கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் சிறப்பம்சம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 Jan 2022 2:49 AM GMT

ஞாயிற்றுக்கிழமை நேற்று நடைபெற்ற சென்னை வடபழனி கோவிலின் கும்பாபிஷேகம் யூடியூப் சேனலில் நிகழ்ச்சிகள் நேரலையில் காண்பிக்கப்பட்டது. மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர்பாபு இதுபற்றி கூறுகையில், கொரோனா கட்டுப் பாடுகளைக் கருத்தில் கொண்டு, ஞாயிற்றுக் கிழமை நகரில் உள்ள வடபழனி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள 50 கோயில்களின் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.


இருப்பினும், பொதுமக்கள் இந்த நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்றும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு சனிக்கிழமை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வடபழனி கோயிலில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயிலின் யூடியூப் சேனலில் பக்தர்கள் பார்வையிடலாம் என்றார். முக்கிய குடமுழுக்கு காலை 10.30 மணி முதல் 11 மணி வரை நடைபெறும், வெள்ளி வேல் வழங்கப்பட்டது. திங்கள் முதல் வியாழன் வரை பக்தர்கள் கோயிலுக்குச் செல்லலாம் என்றும் அவர் கூறினார்.


கோயிலுக்கு நன்கொடையாளர்கள் வழங்கிய ₹21 லட்சம் மதிப்பில் வெள்ளியால் செய்யப்பட்ட வேள்வி, ₹5 லட்சத்தில் இரண்டு விளக்குகள், ₹5 லட்சம் மதிப்பில் பிரபை ஆகியவற்றை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். பூஜைகளை https://www.youtube.com /channel/UCntBdqxaQ9v9Qr7saUmXq0g என்ற இணையதளத்தில் நேரடியாக பார்க்கலாம். 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வது, பல்வேறு நன்மைகளைத் தரக்கூடியது என்றும், மேலும் 21 நாட்கள் வரை கும்பாபிஷேகத்தின் முழு பலன்கள் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் அனுமதிக்கும் நாட்களில் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

Input & Image courtesy: The Hindu








Next Story
கதிர் தொகுப்பு
Trending News