Kathir News
Begin typing your search above and press return to search.

இந்த பழத்தின் விதைகள் விஷத்திற்கு ஒப்பானதா ?

Did you know Apple Seeds are Poisonous?

இந்த பழத்தின் விதைகள் விஷத்திற்கு ஒப்பானதா ?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 Sep 2021 1:01 AM GMT

அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும் என்று சொல்வார்கள் அதே போலத்தான், ஆப்பிள் பழம். ஆப்பிள் ஆரோக்கியமான பழங்களில் ஒன்று தான் ஆனால் இந்த சத்தான பழம் குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் ஆபத்தானதும் கூட. ஆப்பிள் விதைகள் விஷத்தன்மை கொண்டவை என்பதும் அவற்றை சாப்பிட்டால் மரணம் நிகழும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆப்பிள் விதைகளில் அமிக்டலின் உள்ளது. இது மனித செரிமான நொதிகளுடன் தொடர்பு கொள்ளும்போது சையனைடை வெளியிடுகிறது. அமிக்டாலினில் சையனைடு மற்றும் சர்க்கரை உள்ளது, இது உட்கொள்ளும்போது உடலில் ஹைட்ரஜன் சயனைடாக மாற்றப்படுகிறது.


இந்த சையனைடு உங்களை நோய்வாய்ப்படுத்தலாம் மற்றும் உங்களைக் கொல்லவும் கூட வாய்ப்புண்டு. ஆனால் விதைகளை தற்செயலாக உட்கொள்வதால் கடுமையான நச்சுத்தன்மை ஏற்படாது. தற்செயலாக அதிக அளவிலான விதைகளை சாப்பிட நேர்ந்தால், இதன் விஷத்தன்மை மரணத்தை ஏற்படுத்தும். ஆக்ஸிஜன் விநியோகத்தில் குறுக்கிட்டு சையனைடு வேலை செய்கிறது. இரசாயன வடிவத்தைத் தவிர, பாதாமி, செர்ரி, பிளம், பீச் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட சில பழங்களின் விதைகளிலும் இந்த சையனைடு காணப்படுகிறது.


இந்த விதைகளில் கடினமான பாதுகாப்பு பூச்சு உள்ளது. இது அமிக்டாலினுக்குள் மூடுகிறது. விதைகளின் இந்த வலுவான பாதுகாப்பு அடுக்கு செரிமான சாறுகளுடன் சேர்வதை எதிர்க்கும். இதனால் நாம் அவ்வவ்போது விதையோடு சாப்பிட்டாலும் நமக்கு எந்த சிக்கலும் ஏற்படுவதில்லை. சுமார் 200 அரைக்கப்பட்ட ஆப்பிள் விதைகள், மனித உயிரை மாய்த்து விடும் அளவுக்கு ஆபத்தானது. சையனைடு உங்கள் இதயம் மற்றும் மூளையை சேதப்படுத்தும். இது அரிதான சந்தர்ப்பங்களில் கோமா மற்றும் மரணத்திற்கும் கூட வழிவகுக்கும். உண்மையில், அதிக அளவில் உட்கொண்டால், வலிப்பு, மூச்சுத் திணறல், நடுக்கம், பிடிப்பு, அதிகரித்த இதயத் துடிப்பு, சுவாசக் கோளாறு, குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

Input & Image courtesy:Healthline

.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News