வறுமையால் ஏற்பட்ட அவலம்: 8 மாத பெண் குழந்தை 800 ரூபாய்க்கு விற்பனை
ஒடிசாவில் வறுமை காரணமாக எட்டு மாத பெண் குழந்தையை 800 ரூபாய்க்கு ஒரு பழங்குடியின பெண் விற்றுள்ளார்.
By : Karthiga
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ஜா மட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் காரமி முர்மு. இவரது கணவர் முசு தமிழ்நாட்டில் பணிபுரிகிறார். சமீபத்தில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. வறுமை காரணமாக அந்த குழந்தையை வளர்க்க முடியாது என்று நினைத்தால் அப்பெண் குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு அதை 800 ரூபாய்க்கு விற்று விட்டார்.
இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த கணவர் முசு புதிதாக பிறந்த இரண்டாவது குழந்தையைப் பற்றி கேட்டுள்ளார். அப்போது குழந்தை இறந்துவிட்டதாக கராமி முர்மு பொய் கூறியுள்ளார். இதனால் கணவர் முசு போலீசில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் புதிதாக பிறந்த பெண் குழந்தையை ரூபாய் 800-க்கு ஒரு குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்றது தெரிய வந்தது. இது தொடர்பாக குழந்தையின் தாய் காராமி முர்மு அதை வாங்கிய தம்பதி, அதற்கு ஏற்பாடு செய்த நபர் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.