ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 26 கோடி காப்பீடு அட்டைகள் விநியோகம்!
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 26 கோடி காப்பீடுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
By : Karthiga
மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற பெயரில் சுகாதார காப்பீடு திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இதில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெற முடியும். தற்போது இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 26 கோடி பேர் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டு கார்ப்பரேட் அட்டைகள் வழங்கப்பட்டு புதிய மைல்கள் சாதனை படைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக 49 சதவீதம் ஆயுஷ்மான் அட்டைகளை பெண் பயனாளிகள் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில வாரியான விவரங்களின் படி 4 கோடி கார்டுகள் பெற்று உத்திரபிரதேச மாநிலம் முதலலிடம் வகிக்கிறது. இதை அடுத்து மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் இரண்டாம் மூன்றாம் இடங்களை வகிக்கின்றன. இந்த மாநிலங்களில் முறையை 3.60 கோடி கார்டுகளும் 2.4 கோடி கார்டுகளும் உள்ளன.
இதுவரை 5.7 கோடி பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆயுஷ்மான் திட்டத்தில் சேர ஆயுஷ்மான் செயலி செயல்பாட்டில் உள்ளது. இந்த செயலியானது பயனாளிகள் எந்த மையத்திற்கும் செல்லாமல் சொந்த விவரங்களை நான்கு படிகளில் பதிவிட்டு ஆயுஷ்மான் கார்டை உருவாக்க உதவுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
SOURCE : DAILY THANTHI