Kathir News
Begin typing your search above and press return to search.

கருணாநிதிக்காக தீக்குளித்த அதிதீவிர உடன்பிறப்பு தி.மு.கவில் இருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்தார்.! #DMK #ADMK

கருணாநிதிக்காக தீக்குளித்த அதிதீவிர உடன்பிறப்பு தி.மு.கவில் இருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்தார்.! #DMK #ADMK

கருணாநிதிக்காக தீக்குளித்த அதிதீவிர உடன்பிறப்பு தி.மு.கவில் இருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்தார்.! #DMK #ADMK

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Aug 2020 12:30 PM GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 40 ஆண்டு காலத் திமுக பேச்சாளரும் கருணாநிதிக்காக தீக்குளித்த சாமிநாதன் தி.மு.கவில் இருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்தார்.

இது பற்றி கூறிய சாமிநாதன் "நான் எதிர்க்கட்சி பேச்சாளராக இருந்தாலும், இந்த கொரோனா சமயத்தில் தமிழக அரசின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. அனைத்து மக்களுக்கும் அரசு சார்பில் நிவாரண உதவி வழங்கியது.

தி.மு.க தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டு சிறை சென்றபோது அந்த செய்தியை தாங்க முடியாமல் தீக்குளித்து ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு வந்தேன். நான் தி.மு.க மீது பற்றுக்கொண்ட நான் மருது அழகுராஜ் அவர்களின் மக்கள் தொண்டினை பாராட்டும் விதமாகவும், தொகுதி முழுவதும் மக்கள் ஆதரவைப் பெற்ற நபரான மருது அழகுராஜ் முன்னிலையில் மக்கள் பணியில் தன்னை இணைத்துக் கொள்ள எனது தலைமையில் 60க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க கட்சியில் இணைந்து உள்ளேன்" என்றார்.

தி.மு.க'வில் உட்கட்சி மோதல்கள் அதிகம் வெடித்துள்ள நிலையில் இதுமாதிரி அதிதீவிர தொண்டர்கள் தி.மு.க'வில் இருந்து விலகுவது கட்சிக்கு ஆபத்து என உடன்பிறப்புகள் கூறி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News