கறுப்பர் கூட்ட கருப்பாட்டுக்கு தி.மு.க வழக்கறிஞர் வக்காலத்து - தி.மு.க இந்து விரோதக் கட்சியே என மீண்டும் நிரூபணம்!
கறுப்பர் கூட்ட கருப்பாட்டுக்கு தி.மு.க வழக்கறிஞர் வக்காலத்து - தி.மு.க இந்து விரோதக் கட்சியே என மீண்டும் நிரூபணம்!
By : Kathir Webdesk
பெரியாரிய வாதிகளுக்கு ஒன்று என்றால் முண்டியடித்துக் கொண்டு முன்னால் வந்து ஆஜராகும் தி.மு.க முருகக் கடவுளையும் கந்தசஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்தி பேசிய கறுப்பர் கூட்டம் விஷயத்தில் கண்டும் காணாமல் இருந்தது வித்தியாசமான அணுகுமுறையாகத் தான் இருந்தது. அதற்கு மேல் ஒரு படி போய் அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஆர்எஸ் பாரதியை விட்டு சொல்லச் சொன்னது தி.மு.க தேர்தல் பயத்தில் இருப்பதை காட்டிக் கொடுத்தது.
சமூக ஊடகங்களில் கருப்பர் கூட்டத்துக்கும் தி.மு.கவுக்கும் இருக்கும் தொடர்பை நிரூபிக்கும் வகையில் பல ஆதாரங்கள் முன் வைக்கப்பட்ட போதும் இது ஆர்எஸ்எஸ் சதி என்று உடன்பிறப்புகள் கதறி வந்தனர். ஆனால் இப்போதோ, முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான செந்தில் வாசனுக்கு ஜாமீன் மனுத் தாக்கல் செய்து அவரது தரப்பு வழக்கறிஞராக ஆஜரானவர் தி.மு.க வழக்கறிஞர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
ராஜ் திலக் என்ற இந்த வழக்கறிஞர் தி.மு.க ஆட்சிக் காலத்தில் அரசு வழக்கறிஞராக இருந்த ராஜ் இளங்கோவின் மகன். மேலும் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் NR இளங்கோவிடம் இவர் ஜூனியராகவும் பயிற்சி பெறுகிறார். முன்னரே காவல்துறை விசாரணையில் செந்தில் வாசன் தி.மு.க ஐடி விங்கில் பணியாற்றிய உண்மை தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செந்தில் வாசன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருந்த மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ மற்றும் தி.மு.க ஐடி விங் செயலாளர் பிடிஆர்.பி. தியாகராஜனுடன் உணவருந்தும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மற்றொரு கறுப்பர் கூட்ட கருப்பாடு சுரேந்தர் நடராஜன் தி.மு.கவுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட புகைப்படங்களும் வெளியாகி கறுப்பர் கூட்டம்-தி.மு.க இடையிலான தொடர்பை உறுதிப்படுத்தின.