Kathir News
Begin typing your search above and press return to search.

வரும் தேர்தலில் 3-வது பெரிய கட்சியானா தி.மு.க, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் போட்டியிடும்! தி.மு.க வை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

வரும் தேர்தலில் 3-வது பெரிய கட்சியானா தி.மு.க, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் போட்டியிடும்! தி.மு.க வை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

வரும் தேர்தலில் 3-வது பெரிய கட்சியானா தி.மு.க, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் போட்டியிடும்!  தி.மு.க வை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Aug 2019 1:57 AM GMT


நாடு முழுவதும் கடந்த 15-ஆம் தேதி, 73-வது சுதந்திரதின விழா, வெகு
சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய
கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.


சென்னை கோட்டை
கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேசியக்கொடி ஏற்றி
வைத்து உரை நிகழ்த்தினார்.


இதேபோல பெரும்பாலான
அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கட்சி அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்து
சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள். ஆர்.எஸ் பாரதியை கொடியேற்ற சொல்லிவிட்டு தி.மு.க
தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றாமல் புறக்கணித்தார்.


அதேபோல அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி
தொடர்பாளர் ரிபப்ளிக் டிவியில் நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, “காஷ்மீர்
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஒருபோதும் இருந்ததில்லை” என்று
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார்.


காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கு எதிராக
பாகிஸ்தான் குரல்கொடுத்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகளும்
இந்தியாவுக்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றனர்.


இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து
மோடி அரசுக்கு துணை நிற்கும்போது, தி.மு.க, காங்கிரசின்
ஒரு பிரிவு உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்த்து வருகின்றன.


இந்தியாவிற்கு எதிரான தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
போராட்டம் அறிவித்து உள்ளார். நாளை மறுநாள் (22-ஆம்தேதி) டெல்லியில்
இந்த போராட்டம் நடக்கிறது என்று அறிவிக்கப்ட்டுள்ளது.


இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ள
தி.மு.கவையும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினையும் பாகிஸ்தான் தலையில் தூக்கி
வைத்து கொண்டாடுகிறது.


பாகிஸ்தானின் அரசு அதிகாரப்பூர்வமாஇணையதளமான http://www.radio.gov.pk என்ற இணையதளத்தில் இந்தியாவுக்கு எதிரான தி.மு.கவின் போராட்டம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி ஆகிய தி்.மு.கவின் முன்னணி தலைவர்கள் அடங்கிய படத்தையும் வெளியிட்டு, பாகிஸ்தான் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது.


பாகிஸ்தானின் http://www.radio.gov.pk இணையதளத்தில் இது
தொடர்பாக வெயியிட்டுள்ள செய்தியில், “இந்தியாவின் 3-வது பெரிய கட்சியான திராவிட முன்னேற்ற கழகம், காஷ்மீர்
விவகாரம் தொடர்பாக மத்திய மோடி அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளது.
புதுடெல்லியில் வருகிற வியாழக்கிழமை இந்த போராட்டம் நடக்கிறது” என்று குறிபிடப்பட்டுள்ளது.


மேலும்,”தி.மு.க. தலைவர்
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர்
மாநிலத்திற்கு இந்திய அரசால் வழங்கப்பட்டு வந்த தனி அந்தஸ்தை நீக்கியதற்கு கடும்
கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்” என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்திய அரசுக்கு எதிராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
நடத்த உள்ள செய்தியை, ரேடியோ பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலும்
வெளியிட்டு பாகிஸ்தான் மகிழ்ச்சி கடலில் திழைத்துள்ளது.




https://twitter.com/RadioPakistan/status/1163714540057612289


பாகிஸ்தானின் இந்த டுவிட்டர் பக்கத்திற்கு நமது தமிழகத்தை சேர்ந்த நெட்டிசன்கள் மு.க.ஸ்டாலினையும், தி.மு.கவையும் வறுத்து எடுத்து வருகின்றனர்.


“நடைபெறவுள்ள தேர்தலில் 3-வது பெரிய கட்சி, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் போட்டியிருகிறது. பாகிஸ்தானின்
அடுத்த பிரமராக மு.க.ஸ்டாலின் நிச்சயமாக வருவார். அவர் விஞ்ஞான ஊழல் மூலம்
பாகிஸ்தானில் இப்போது உள்ள ஆட்சியைவிட சிறப்பான ஆட்சியை தருவார்” ஒருவர் குறிப்பிட்டுள்ளார்




https://twitter.com/Eddumannu/status/1163805828819763200


“நம்ம தலைவர் பெருமை , தேச பக்தி, கடமை உணர்ச்சி பாக்கிஸ்தான்காரன் க்கு தெரியுது... இங்க CM ஆக முடியாட்டியும்பாக்கிஸ்தான்ல Scope இருக்கு தல.... நீ போராடு தலைவா பாக்கிஸ்தான் மக்களுக்காக...” என்று மதுரை சரவணன்
என்பவர் குறிப்பிட்டுள்ளார்




https://twitter.com/Saravan10931414/status/1163793855738572801


தி.மு.க தலைவர் ஸ்டாலினின் தேசதுரோக செயலை பலரும் மிகக்கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.




https://twitter.com/rajinikanth_ss/status/1163944566942306304



Next Story
கதிர் தொகுப்பு
Trending News