மது போதையில், அரைகுறை ஆடையுடன் தி.மு.க., நிர்வாகி - ஒப்பாரி வைக்கும் நிலையில் 'ஒன்றிணைவோம் வா' திட்டம்!
மது போதையில், அரைகுறை ஆடையுடன் தி.மு.க., நிர்வாகி - ஒப்பாரி வைக்கும் நிலையில் 'ஒன்றிணைவோம் வா' திட்டம்!
By : Kathir Webdesk
மதுவுக்கு எதிரான போராட்டம் குறித்து பேசும் தி.மு.க., இளைஞர் அணி செயலரிடம், கட்சி பிரமுகர் மது போதையில் பேசும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கோவை தெற்கு மாவட்ட, தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளராக, பொள்ளாச்சியைச் சேர்ந்த, நவநீதகிருஷ்ணன் உள்ளார். இவர், 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தில், இணையம் வாயிலாக, இளைஞரணி செயலர் உதயநிதியிடம் பேசும் வீடியோ ஒன்று, 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்ற ஆடியோவுடன், மது போதையில், அரைகுறை ஆடையுடன் அவர் இருப்பது போன்றும், மது பாட்டில்களை கையில் வைத்து நிற்பது போன்றும் போட்டோக்களை இணைத்து, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுள்ளது.
எட்டு ஆண்டுகளுக்கு முன் எடுத்த புகைப்படத்தை வீடியோவில் வெளியிட்டு களங்கம் ஏற்படுத்துகின்றனர் என்று நவநீத கிருஷ்ணன் கூறியிருக்கிறார். மேலும் புகைப்படத்தில் இருப்பது நான் அல்ல; மார்பிங் செய்துள்ளனர். இது குறித்து, தலைமைக்கு புகார் தெரிவிக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.