Kathir News
Begin typing your search above and press return to search.

வங்கியில் ரூபாய் 50000-க்கும் மேல் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய கட்டாயம் தேவையானது எது தெரியுமா?

வங்கியில் ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய 'பான்' கட்டாயம் தேவை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் பேட்டி அளித்துள்ளார்.

வங்கியில் ரூபாய் 50000-க்கும் மேல் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய கட்டாயம் தேவையானது எது தெரியுமா?

KarthigaBy : Karthiga

  |  23 May 2023 5:45 AM GMT

2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 19- ஆம் தேதி அறிவித்தது. அந்த நோட்டுகள் செப்டம்பர் 30-ம் தேதி வரை செல்லும் என்றும் அதற்குள் வங்கியில் கொடுத்த மாற்றிக் கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்புக்கு பிறகு முதல் முறையாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது :-


2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் அறிவிப்பு நாணயம் மேலாண்மை நடவடிக்கையின் ஒரு அங்கம் தான். நமது நாணயம் மேலாண்மை நடவடிக்கை மிகவும் வலுவானது. உக்ரைன் போர் மேலை நாடுகளில் வங்கிகள் திவால் போன்ற சிக்கல்களையும் மீறி ரூபாய் மதிப்பு வலுவாக உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பின்போது வாபஸ் பெறப்பட்ட நோட்டுகளை ஈடுகட்டவே 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன .


மொத்த கரன்சி புழக்கத்தில் 2000 ரூபாய் நோட்டுகளின் பங்களிப்பு வெறும் 10.8 சதவீதம் தான். இந்த நோட்டுகளை வாபஸ் பெறுவதால் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு மிக குறைவாகவே இருக்கும். 2000 ரூபாய் நோட்டுகளில் பெரும்பாலானவை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கருவூலத்துக்கு வந்துவிடும் என்று கருதுகிறோம். அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் தேவைக்கு அதிகமாக கையில் உள்ளன. ரிசர்வ் வங்கியிடம் மட்டுமின்றி வங்கிகளின் பண அறைகளிலும் அவை உள்ளன. எனவே கவலைப்பட தேவையில்லை.


2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பொதுமக்கள் படும் சிரமங்களை அறிவோம். வங்கிகள் போதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் ஒழுங்கு விதிமுறைகள் வெளியிடப்படும் வங்கி கணக்கில் ரூபாய் 50,000 அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தால் வருமான வரி தேவைக்காக பான்கார்டு அவசியம்.பான் எண்ணெ கட்டாயம் குறிப்பிடுவது நடைமுறையில் இருக்கிறது.


2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ரூபாய் ஐம்பதாயிரம் டெபாசிட் செய்வதற்கும் அது பொருந்தும். இந்த பணப்புழக்கம் நாள்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். "ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகம் செய்யப்படுமா?" என்று நிருபர்கள் கேட்டதற்கு, இது யூகமான கேள்வி இப்போதைக்கு அந்த திட்டம் இல்லை என்று சக்தி காந்ததாஸ் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News