Kathir News
Begin typing your search above and press return to search.

அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி 149 கோடி நஷ்டம் ஏற்படுத்திய 'டான்ஜெட்கோ' - அம்பலமாகும் அறிக்கைகள்

டான்ஜெட்கோ நிறுவனம் 2017 முதல் 2020 வரையிலான மூன்று ஆண்டுகளில் மிக அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியதாக மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை விமர்சித்துள்ளது.

அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி 149 கோடி நஷ்டம் ஏற்படுத்திய டான்ஜெட்கோ - அம்பலமாகும் அறிக்கைகள்

Mohan RajBy : Mohan Raj

  |  12 May 2022 12:06 PM GMT

டான்ஜெட்கோ நிறுவனம் 2017 முதல் 2020 வரையிலான மூன்று ஆண்டுகளில் மிக அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியதாக மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நிதி செயல்பாடுகள் குறித்த ஆய்வறிக்கை தமிழக சட்டசபையில் சமர்பிக்கப்பட்டது. சி.ஏ.ஜி எனப்படும் மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தயாரித்த இந்த அறிக்கை அளிக்கும் நிறுவனம் 2017 முதல் 2020 வரையிலான மூன்று ஆண்டுகளில் டான்ஜெட்கோ மிக அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது 2012 முதல் 17 வரையிலான ஆண்டு வரை ஒரு யூனிட் மின்சாரத்தை டான்ஜெட்கோ'விற்கு 4.99 காசுகள் என்ற நிலையில் அதானி நிறுவனம் விற்றுள்ளது அதற்கு அடுத்து மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு யூனிட் 3 ரூபாய் 50 காசு என்ற விலையில் அதானி நிறுவனம் விற்க முன் வந்த நிலையில் அதனை விடுத்துவிட்டு 4.10 முதல் 5.48 வரை விலை கொடுத்து வேறு இடத்தில் அதிக விலைக்கு வாங்கியுள்ளது. அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கியதால் நிறுவனத்திற்கு 149 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மின்சாரத்தை வாங்க டான்ஜெட்கோ சில நிறுவனங்களுடன் ஏற்கனவே நீண்ட கால ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த நிலையில் அதனை கைவிட்டு விட்டு வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News