Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் ஊடுருவியதா கஞ்சா சாக்லேட் - விற்பனை செய்த மூன்று பேர் கைது!

தமிழகத்தில் வட சென்னையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த மூன்று பேர் கைது.

தமிழகத்தில் ஊடுருவியதா கஞ்சா சாக்லேட் - விற்பனை செய்த மூன்று பேர் கைது!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 Dec 2022 1:56 AM GMT

சென்னை ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவெற்றியூர் உள்ளிட்ட பல்வேறு வடசென்னை பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீஸ்காரர் தீவிரப் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ராயபுரம் பகுதியில் உள்ள என்.ஆர்.டி மேம்பாலம் அருகே நேற்று இரவு பொது சார்பாக சோதனையில் ஈடுபட்டார்கள். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்த பொழுது அவரிடம் ஏராளமான சாக்லேட்டுகள் இருந்ததாக தெரிகிறது.


சந்தேகம் அடைந்து போலீசார் அதனை ஆய்வு செய்த பொழுது அவை கஞ்சா சாக்லேட்டுகள் என்பது தெரிய வந்தது. அதை பயன்படுத்தி கடத்தி வந்த சாய்புரம் பகுதியைச் சேர்ந்த மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்க்கும் கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். அவர் கொடுத்த தகவல் என்பது சாக்லேட் சப்ளை செய்த ராயபுரம் தொகுதியில் வசித்து வரும் கோவில் பூசாரி கௌதம் என்பவரை கைது செய்து இருக்கிறார்கள்.


அவர்களுக்கு மேலும் ஒரு குடோனில் இருந்துதான் இந்த கஞ்சா சாக்லேட் சப்ளை செய்து வருவதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து குடோனில் அதிரடி சோதனை நடத்தினார்கள். தமிழக காவல்துறையினர் அங்கு 200க்கும் மேற்பட்ட கஞ்சா சாக்லேட்டுகளும், தடை செய்யப்பட்ட 200 கிலோ போதை பொருட்களும் இருந்தது. இதனை பறிமுதல் செய்தார்கள் போலீசார், பிறகு கார், வேன் போன்று பரிந்துரை செய்யப்பட்ட புதிய நபர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Input & Image courtesy:



Next Story
கதிர் தொகுப்பு
Trending News