Kathir News
Begin typing your search above and press return to search.

ஊரடங்கின் போது போதை பொருட்கள் விற்பனை செய்த 2-பேரை போலீசார் கைது செய்தனர்.!

ஊரடங்கின் போது போதை பொருட்கள் விற்பனை செய்த 2-பேரை போலீசார் கைது செய்தனர்.!

ஊரடங்கின் போது போதை பொருட்கள் விற்பனை செய்த 2-பேரை போலீசார் கைது செய்தனர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 April 2020 3:17 AM GMT

கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது மேலும் பொதுமக்கள் தங்களின் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர் இதேபோல் மதுபானக்கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலியார்பேட்டை போலீசார் முருங்கப்பாக்கம் பிரதான சாலையில் ரோந்து பணி ஈடுபட்டு இருந்தனர் அப்போது அங்கு பூட்டி இருந்த பெட்டி கடை அருகே சிறுவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சென்ற வண்ணம் இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு நின்று கண்காணித்தனர்.

அப்போது பெட்டிக்கடையில் இருந்து 2 பேர் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை சிறுவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர் இதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ததை ஒப்புக்கொணடனர் பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர் மேலும் போதை பாக்கெட்டுகளை வாங்கி சென்ற சிறுவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News