Kathir News
Begin typing your search above and press return to search.

ஹிஜாப் கண்காணிப்பு பிரிவு கலைப்பு - பெண்களின் எதிர் குரலுக்கு அடி பணிந்த ஈரான்!

ஹிஜாப் கண்காணிப்பு பிரிவு கலைப்பு - பெண்களின் எதிர் குரலுக்கு அடி பணிந்த ஈரான்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Dec 2022 7:49 AM GMT

ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஈரான் அரசு ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவைக் கலைத்துள்ளது.

ஈரானில் இஸ்லாமிய மதச் சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வீட்டைவிட்டு வெளியில் செல்லும் 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயம்.

இதற்கிடையே, ஹிஜாப் மத உடைக் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க 2006-ல் அறநெறிக் காவல் பிரிவை ஈரான் அரசு தொடங்கியது. ரோந்துப் பணியில் ஈடுபடும் இந்தப் பிரிவுக்கு, உடை கட்டுப்பாடுகளை மீறுவோரைக் கைது செய்யும் அதிகாரமும் இருந்தது.

பொது இடத்தில் சரியாக ஹிஜாப்அணியவில்லை என்று கூறி, மாஸா அமினி(22) என்ற இளம்பெண்ணை அறநெறி போலீஸார் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி கைது செய்தனர்.

போலீஸ் காவலில் அமினி உயரிழந்தார். இதற்கு எதிராக பெண்கள் போராடினர். இதனிடையே, போராட்டத்தை ஒடுக்க போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர், தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதில், 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன.

இந்த சூழலில், அறநெறி காவல் துறையை ஈரான் அரசு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Input from: Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News