Begin typing your search above and press return to search.
பா.ஜ.க'வின் 9 அமைச்சர்களுடன் ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவை பதவி ஏற்றது
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 18 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.
By : Mohan Raj
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 18 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.
மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இன்று புதிய அமைச்சர்களாக 18 பேர் பதவி ஏற்று கொண்டனர்.
இதில் ஒன்பது பேர் பா.ஜ.க'வை சேர்ந்தவர்கள் 9 பேர் சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள். மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பா.ஜ.க'வின் தேவேந்திர பட்னாவிஸும் கடந்த ஜூன் 30ஆம் தேதி பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 40 நாட்களுக்கு பிறகு இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 18 புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
Next Story