Begin typing your search above and press return to search.
தெலுங்கானாவில் ரூபாய் 347 கோடி தேர்தல் பணம் பொருட்கள் பறிமுதல்
தெலுங்கானாவில் 347 கோடி பணம் பொருட்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
By : Karthiga
தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. நேற்று வரை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூபாய் 347 கோடி மதிப்புள்ள ரொக்க பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தம் ரூபாய் 122.6 கோடி ரொக்கம், 230.9 கிலோ தங்கம், 1038.9 கிலோ வெள்ளி, 20.7 கோடி மதிப்புள்ள மதுபானம், 17.18 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் 30.4 கோடி மதிப்புள்ள இலவச பொருட்கள் என மொத்தம் 347 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
SOURCE :DAILY THANTHI
Next Story