Kathir News
Begin typing your search above and press return to search.

கடந்த 7 ஆண்டுகளை விட வேலைவாய்ப்பு அதிகரிக்கும்- "மேன்பவர்" ஆய்வறிக்கை !

Breaking News.

கடந்த 7 ஆண்டுகளை விட வேலைவாய்ப்பு அதிகரிக்கும்- மேன்பவர் ஆய்வறிக்கை !

TamilVani BBy : TamilVani B

  |  15 Sep 2021 5:15 AM GMT

இந்தியாவில் வேலை வாய்ப்புகள் அடுத்த மூன்று மாதத்தில் அதிகரிக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. "மேன் பவர்" நிறுவனம் இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வில் நாட்டின் 44 நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகபடுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இந்த ஆய்வு நாட்டின் 3046 நிறுவங்களிடம் நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் குறைந்து இயல்புநிலைக்கு வரும் போது தேவை அதிகரிக்கும் அதனால் பணியாளர்களை அதிகரிக்க திட்டமிடுள்ளது . இந்த முடிவுகள் கடந்த 7 ஆண்டுகளை ஒப்பிடும் போது வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதை வெளிகாட்டுகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றன.

Source: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News