Kathir News
Begin typing your search above and press return to search.

முதல்வரின் ஓரிரு வார்த்தைகளில் தூக்கம் தொலைத்த உதயநிதி.! #EPS #Udhayanithi #DMK

முதல்வரின் ஓரிரு வார்த்தைகளில் தூக்கம் தொலைத்த உதயநிதி.! #EPS #Udhayanithi #DMK

முதல்வரின் ஓரிரு வார்த்தைகளில் தூக்கம் தொலைத்த உதயநிதி.! #EPS #Udhayanithi #DMK

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Jun 2020 7:36 AM GMT

நேற்று கோவையில் கொரோனோ தடுப்பு பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக'வின் செயல்பாடுகள் குறித்து ஓரிரு வார்த்தைகள் விமர்சனம் செய்தார். அதில், "இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் நடத்தி வரும் ஒரே அரசியல் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான். தனது இருப்பை காட்டிக்கொள்வதற்காக தினந்தோறும் ஸ்டாலின் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். கொரோனா தொற்று அதிகரிக்க திமுகதான் காரணம்.

திமுக விளம்பரத்திற்காக செய்த நிவாரண பணியால் இன்று ஒரு எம்எல்ஏவை இழந்துள்ளது". என கூறினார். இந்த அறிவிப்பை அடுத்து உதயநிதி மாற்று அறிவிப்புகளால் தன் ட்விட்டர் பக்கத்தை நிரப்பி உள்ளார். அதில், "அவர் உழைப்பை நம்புபவர், மற்றவரின் கால்களை அல்ல" எனவும், "அன்பு அண்ணனின் கேள்விக்கு பதிலற்ற வக்கற்றவர்கள்" என்றும் சகட்டுமேனிக்கு கேள்விகள் எழுப்பியுள்ளார்.

கொரோனோ காலகட்டத்தில் மக்களின் பாதுகாப்பிற்காக அரசுப்பணிகளை முடங்கிவிடாமல் செயல்படுத்திவரும் முதல்வர் சொன்ன வார்த்தைகளை பொறுக்க முடியாமல் இவ்வாறெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி கட்சிக்காரர் நம்மிடம் பகிர்ந்தது, "ஏங்க அவர் ஏதாவது வார்த்தை சொன்னா உடனே அதை புடிச்சுட்டு சிறுபிள்ளைதனமா ஏதாச்சும் சொல்ல வேண்டியது. கட்சில மூத்த தலைவர்களே அரசியல் மரபிற்காக பேரிடர் காலத்தில் ஏதும் கூறாமல் அமைதி காக்கும் பொழுது இவர் உளறி கொட்டுகிறார், சிறுபிள்ளைகள் சாவு வீட்டில் விளையாடுவது போல" என முடித்துக்கொண்டார்.

தமிழில் ஒரு சொலவடை உண்டு "குற்றம் உள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும்" என. முதல்வரின் வார்த்தைகளில் உள்ள உண்மையின் வெளிப்பாடு பொறுக்க முடியாமல் நேற்று முதல் தூக்கம் தொலைத்த உதயநிதி'யின் செயல்பாடுகளில் வெளிப்படுகிறது திமுக'வின் உண்மை முகம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News