இனி பதிலடிதான் - ஒற்றை வார்த்தையால் எதிரிகளை அலறவிட்ட ராஜநாத் சிங்!
இந்தியாவின் சுயமரியாதைக்கு எதிராக எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு அடிக்கும் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று ராஜ்நாத்சிங் கூறினார்.
By : Karthiga
தேசிய தொழில்நுட்ப தின கொண்டாட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. பொக்ரானில் வெற்றிகரமாக அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதன் 25வது ஆண்டு விழாவும் நடந்தது. பிரதமர் மோடி மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி ஜிதேந்திர சிங் மற்றும் மூத்த விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது :-
அந்நிய படையெடுப்பாளர்கள் நாளந்தா பல்கலைக்கழகத்தை அழித்தனர். கலாச்சார அடையாளமாக திகழ்ந்த சோமநாதர் ஆலயத்தை சூறையாடினர். இந்த வரலாற்றில் இருந்த நாம் பாடம் கற்றுக் கொண்டோம். இந்த வரலாறு மீண்டும் நடக்க அனுமதிக்க மாட்டோம் என உறுதி எடுத்துள்ளோம். ஆனால் 1998 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனை மூலம் உலகத்துக்கு ஒரு செய்தியை அனுப்பினோம்.
அதாவது நாங்கள் அமைதியை விரும்பும் நாடாக இருக்கலாம் ஆனால் நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் எரிக்கப்படுவதையோ, சோமநாதர் ஆலயம் மீண்டும் சூறையாடப்படுவதையோ சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதுதான் அச்செய்தி .இந்தியாவின் சுயமரியாதைக்கு எதிராக எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு அடிக்கும் உரிய பதிலடி கொடுப்போம் .இவ்வாறு அவர் பேசினார்.