Kathir News
Begin typing your search above and press return to search.

தனது பணம் மற்றும் பதவியை இந்துக்களுக்கு எதிராக பயன்படுத்த நினைத்த முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலர் - டெல்லி வன்முறைக்கு மூளையாக செயல்பட்டது அம்பலம்.!

தனது பணம் மற்றும் பதவியை இந்துக்களுக்கு எதிராக பயன்படுத்த நினைத்த முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலர் - டெல்லி வன்முறைக்கு மூளையாக செயல்பட்டது அம்பலம்.!

தனது பணம் மற்றும் பதவியை இந்துக்களுக்கு எதிராக பயன்படுத்த நினைத்த முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலர் - டெல்லி வன்முறைக்கு மூளையாக செயல்பட்டது அம்பலம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Aug 2020 10:37 AM GMT

டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது இந்துக்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறையில் முக்கியக் குற்றவாளியான ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலர் தாகிர் ஹூசைன் இந்துக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு தான் மூளையாக செயல்பட்டதை ஒப்புக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்துக்கள் பல இஸ்லாமியர்களைக் கொன்று அவர்களது கடைகளுக்கும் வீடுகளுக்கும் தீ வைத்து விட்டதாக கூறி கடந்த பிப்ரவரி 24 மற்றும் 25 அன்று இஸ்லாமியர்களை தாகிர் ஹூசைன் வன்முறைக்கு தூண்டியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

காவல் துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் 2017 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதே தனது அரசியல் அதிகாரம் மற்றும் பணத்தை உபயோகித்து இந்துக்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று தான் நினைத்ததாக தாகிர் ஹூசைன் கூறியுள்ளார். இதற்கு காலித் சைஃபி மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பும் உதவியாக இருந்துள்ளன.

இந்த காலித் சைஃபி தாகிர் ஹூசைனிடம் இருக்கும் பதவியும் பணமும் இந்துக்களுக்கு எதிராகவும் தங்கள் சமூகத்தினருக்கு உதவும் வகையிலும் பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதற்கு தாகிர் தான் எந்த நடவடிக்கைக்கும் தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார். எனவே உச்சநீதிமன்றம் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக தீர்ப்பளித்ததோடு குடியுரிமை திருத்தச் சட்டமும் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இதுதான் சரியான சமயம் என்று இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர்.

காலித் சைஃபி ஷாகீன் பாகில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திற்கு கூட்டிசென்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவப் போராளி உமர் காலித்திடம்‌ அறிமுகப்படுத்தியதாக தாகிர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். உமர் காலித் தான் உயிரிழக்கவும் தயாராக இருப்பதாக கூறியதோடு டேனிஷ் என்பவரை‌ அறிமுக படுத்தியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த இந்த டேனிஷ் இவர்களது திட்டத்திற்கு நிதியுதவி செய்வார் என உறுதி அளித்துள்ளனர். டெல்லியை உலுக்கும் அளவிற்கு ஏதாவது செய்து குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற செய்ய வேண்டும் என இவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர். மக்களை வீதியில் வந்து போராட்டம் செய்ய வைக்கும் பொறுப்பை காலித் சைஃபி ஏற்றுள்ளார்.

இதற்கு தயாராகும் வகையில் காலி குளிர்பான பாட்டில்கள் மற்றும் மதுபாட்டில்களை சேகரித்ததோடு தனது வீட்டில் கட்டட பணி நடந்து வந்ததால் கற்கள் முதலியவற்றையும் சந்தேகத்திற்கு இடம் கொடுக்காமல் எளிதாக சேர்த்து வைக்க முடிந்தது என்று தாகிரா ஹூசைன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் உமர் காலித் ஆசிட், செங்கற்கள், கற்கள், பெட்ரோல் உள்ளிட்டவற்றை சேகரித்து வைக்குமாறு தன்னிடம் கூறியதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு வருகை தந்த போது இவற்றை பயன்படுத்த திட்டம் தீட்டியதாகவும் தாகிர் கூறியுள்ளார். 'டெல்லி கலவரத்தின் போது இந்துக்களுக்கு எதிராக வன்முறையே நிகழவில்லை, பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே இஸ்லாமியர்கள் தான்' என்று இடதுசாரிகள் நிரூபிக்க முயன்று வரும் நிலையில் தாகிர் ஹூசைனின் வாக்குமூலம் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.


நன்றி : Opindia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News