Kathir News
Begin typing your search above and press return to search.

க்ரே பட்டியலில் இருந்து பாகிஸ்தானுக்கு விலக்கு - இந்தியா கடும் கண்டனம்

எப்.ஏ.டி.எஃப் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு விலக்கு அளிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

க்ரே பட்டியலில் இருந்து பாகிஸ்தானுக்கு விலக்கு - இந்தியா கடும் கண்டனம்

Mohan RajBy : Mohan Raj

  |  22 Oct 2022 1:22 PM GMT

எப்.ஏ.டி.எஃப் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு விலக்கு அளிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாரிசில் நடைபெற்ற தீவிரவாத நிதி கண்காணிப்பு அமைப்பின் கூட்டத்தில் பாகிஸ்தான் மீதான பொருளாதார கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன. தீவிரவாதிகளுக்கு நிதி அளித்த காரணத்தினால் பாகிஸ்தான் க்ரே பட்டியலில் வைக்கப்பட்டு இருந்தது. அண்மையில் தீவிரவாத இயக்கங்கள் மீது சில நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டதால் க்ரே பட்டியலில் இருந்து பாகிஸ்தானுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கு இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில் தீவிரவாத எதிரான வெளிப்படையான நடவடிக்கை பாகிஸ்தான் நடத்த வேண்டும் என உலக நாடுகள் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளாத நிலையில் இது போன்ற சலுகை அளிப்பது நல்லதல்ல எனவும் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.


Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News