Kathir News
Begin typing your search above and press return to search.

ரயில் நிலையங்களில் யு.பி.ஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி- இந்திய ரயில்வே அறிமுகம்!

இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் யு.பி.ஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

ரயில் நிலையங்களில் யு.பி.ஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி- இந்திய ரயில்வே அறிமுகம்!

KarthigaBy : Karthiga

  |  2 April 2024 8:20 AM GMT

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது அதிகமாகிவிட்டது. அந்த வகையில் சிறிய கடை முதல் பெரிய வணிகம் நிறுவனங்கள் வரை யு.பி.ஐ மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் வசதியை வைத்திருக்கிறார்கள். டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வது என்று பெரும்பாலான இடங்களில் அறிமுகமாகிவிட்டாலும் ஒரு சில இடங்களில் இதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறது .

குறிப்பாக பஸ் மற்றும் ரயிலுக்கான டிக்கெட் எடுப்பது நேரடியாக பணம் செலுத்தி எடுக்கும் நிலை இருந்து வந்தது .ரயில்களில் முன்பதிவிட்டு டிக்கெட்டுகளை ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் பெறும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதே போல முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கும், டிக்கெட் பெற டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை கொண்டு வர வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு ரயில் பயணிகள் கோரிக்கை அளித்து வந்தனர் . இந்த நிலையில் இந்திய ரயில்வே நிர்வாகம் இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் யு.பி.ஐ டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்வதற்கான வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது .

மத்திய அரசு தற்போது அனைத்து பகுதிகளிலும் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனைகளை அதிகப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு படியாக இனி முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்டுகளையும் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனையில் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை நேற்று முதல் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் அமலுக்கு வந்தது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News