Kathir News
Begin typing your search above and press return to search.

தொங்கும் தூண், சிவனின் பல வடிவங்கள், ஏழு தலை நாகம் சிலை, அதிசய லேபட்சி கோவில்.!

தொங்கும் தூண், சிவனின் பல வடிவங்கள், ஏழு தலை நாகம் சிலை, அதிசய லேபட்சி கோவில்.!

தொங்கும் தூண், சிவனின் பல வடிவங்கள், ஏழு தலை நாகம் சிலை, அதிசய லேபட்சி கோவில்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 May 2020 6:59 AM IST

ஆந்திர மாநிலம் அனந்த்பூர் வட்டத்தில் உள்ளது லேபட்சி எனும் சிறிய கிராமம் . இது பெங்களுரில் இருந்து சுமார் 120 கி.மி தொலைவில் அமைந்துள்ளது . அகத்தியரால் கட்டப்பட்டதாக சொல்லப்படும் இக் கோயிலில் நிறைய அதிசயங்கள் நிறைந்துள்ளன . ராமாயணத்தில் வரும் ஜடாயு மோட்ச சம்பவம் இந்த இடத்தில் நடந்ததாக நம்பப்படுகிறது. இங்கு சிவன் விஷ்ணு வீரபத்ரர் ஆகியோருக்கு கோயில்கள் உள்ளன . இங்கு உள்ள வீரபத்ரர் கோயிலில் உள்ள தூண் அந்தரத்தில் பூமியை தொடாதவாறு இருப்பது ஒரு அதிசயமாகும் .

விஜய நகர மன்னர்கள் ஆட்சி காலத்தில் மெருகேற்றப்பட்ட கலை வடிவங்கள் இக் கோயிலில் உருவாக்கப்பட்டன இக் கோயிலின் ஒவ்வொரு தூணிலும் ஆச்சர்யமான சிற்ப வேலைபாடுகள் பிரம்பிக்கதக்க வகையில் உள்ளன . இந்தியாவிலேயே உயரமான நந்தி இங்கு தான் உள்ளது . சுமார் 70 தூண்கள் உள்ள இக்கோயிலில் 7 தலையுடன் உள்ள நாகத்தின் குடையில் கீழ் இருக்கும் லிங்கம் எல்லோரையும் கவரும் வகையில் உள்ளது .

இந்த நாக சிற்பத்தை பற்றி சுவாரஸ்யமான ஒரு கதை உள்ளது . ஆதாவது இந்த சிலையை செதுக்கிய சிற்பி, காலையில் தன் தாயிடம் உணவு சமைக்குமாறு பணித்து விட்டு இந்த சிலையை செதுக்க ஆரம்பித்து பின் மதியம் சமைத்து முடிப்பதற்குள் அந்த சிலையை செதுக்கி விட்டதாக சொல்கிறார்கள். இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிலையாகும் . இன்றும் ஜடாயு காயம் பட்டு விழுந்த இடம் பாதுகாக்கப்பட்டு வருகிறது . சிவனின் 14 வடிவங்கள் இந்தியாவிலேயே இந்த கோயிலில் தான் இருக்கிறது . மேலும் இங்கு கற்களாலேயே செதுக்கப்பட்ட சங்கிலி இங்கு வருபவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கிறது .

இந்தியாவில் சிற்ப வேலைபாடுகளுக்கு பெயர் போன கோயில்கள் பல இருந்தாலும் இந்த லேபட்சி கோயில் மிக மிக ஆச்சர்யபடும் வகையில் அமைந்துள்ளது . 19 நூற்றாண்டை சேர்ந்த பிரிடிஷ் பொறியாளர் இங்கு பூமியில் படாமல் இருக்கும் தொங்கும் தூணை பூமியில் பதிய வைக்க பெரும் முயற்சி எடுத்தார் . மூன்று ஆண்டுகளாகியும் அவரால் எந்த முன்னேற்றமும் காண முடியாததால் விரக்தியில் முயற்சியை கைவிட்டார் . தினம் தினம் இக்கோயிலுக்கு பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அதிகமாக வருகிறார்கள் ..

Next Story
கதிர் தொகுப்பு
Trending News