சுப்ரீம் கோர்ட் பெயரில் போலி இணையதளம் - மக்களே உஷார்!
சுப்ரீம் கோர்ட் பெயரில் போலி இணையதளம் இயங்கி வருவதால் தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
By : Karthiga
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 - வது சட்டப்பிரிவு நீக்கத்துக்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் அரசியல் சட்ட அமர்வு தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையில் கூடியது. அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது :-
சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரப்பூர்வ இணையதளம் போன்று தோற்றம் அளிக்கும் போலி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இணையதளம் முகவரி மூலம் தனிப்பட்ட தகவல்களையும் ரகசிய தகவல்களையும் திருடி வருகிறார்கள்.
எனவே வக்கீல்கள் மனுதாரர்கள் பொதுமக்கள் ஆகியோர் போலி இணையதளம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .உறுதி செய்யப்படாத இணையதள லிங்குகளை திறக்கவும் பகிர்ந்து கொள்ளவும் முயற்சிக்க வேண்டாம் .தங்கள் தனிப்பட்ட தகவல்களை பதிவிட வேண்டாம். பண பரிமாற்றத்திற்கு அவற்றை பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI