Kathir News
Begin typing your search above and press return to search.

விழிப்புணர்வடைந்த கிராமங்கள் - பன்னாட்டு பொருட்கள் புறக்கணிக்கப்பட்டு பெருகும் இந்திய பொருட்களின் விற்பனை!

விழிப்புணர்வடைந்த கிராமங்கள் - பன்னாட்டு பொருட்கள் புறக்கணிக்கப்பட்டு பெருகும் இந்திய பொருட்களின் விற்பனை!

விழிப்புணர்வடைந்த கிராமங்கள் - பன்னாட்டு பொருட்கள் புறக்கணிக்கப்பட்டு பெருகும் இந்திய பொருட்களின் விற்பனை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Oct 2019 12:46 PM GMT


அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான ‘நீல்சன்’ (Nidlsen) ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டு நுகர்வு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, அதனடிப்படையிலான அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் கிராமப்புற நுகர்வு குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குளிர்பானம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மலிவுவிலை மிட்டாய்கள் போன்றவை அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்களாக கருதப்படுகின்றன. இந்தப் பொருட்கள் கிராமப்புற சந்தைகளில் அதிகம் விற்பனையாகக் கூடியவை. அதிவேகமாக நுகரும், நுகர்வோர் பொருட்கள் விற்பனையில் ஒட்டுமொத்த வளர்ச்சியில் 36 சதவிகிதம், கிராமப்புறங்களை நம்பியே உள்ளது.


உடலுக்கு கேடு விளைவிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிபானம் போன்றவற்றின் மீது அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் அதிவேக நுகர்வு பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கிராமப்புறங்களிலும் எதிரொலித்துள்ளது. இதன் காரணமாக ‘நீல்சன்’ வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News