புது இந்தியாவின் தந்தை பிரதமர் மோடி - அம்ருதா பட்னாவிஸ் புகழாரம்
புதிய இந்தியாவின் தந்தை பிரதமர் நரேந்திர மோடி என மராட்டிய துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா கூறினார்.
By : Karthiga
பா.ஜனதாவை சேர்ந்த மராட்டிய துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருததா பட்னாவிஸ். இவர் தனியார் வங்கி ஒன்றில் நிர்வாகியாக உள்ளார். அம்ருதா பட்னாவிஸ் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரை பேட்டி எடுத்தவர் "நீங்கள் கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியை நாட்டின் தேசப்பிதா என்று கூறி இருந்தீர்களே, அப்படி என்றால் மகாத்மா காந்தி யார்?" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அம்ருதா பட்னாவிஸ்" நமக்கு இரண்டு தேச பிதாக்கள் உள்ளனர். நரேந்திர மோடி புதிய இந்தியாவின் தந்தை, மகாத்மா காந்தி முந்தைய இந்தியாவின் தந்தை" என்று குறிப்பிட்டார். அம்ருதா பட்னாவிசின் கருத்துக்களை மராட்டிய மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மந்திரியுமான யஷோமதி தாக்குர் கடுமையாக கண்டித்துள்ளார். அவர் கூறுகையில் "பா. ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள் காந்தியை மீண்டும் கொல்ல முயற்சிக்கின்றனர். பொய்களை திரும்பத் திரும்பச் சொல்லி, காந்தி போன்ற மகான்களை அவமதிப்பதன் மூலம் வரலாற்றை மாற்றுவதற்காக அவர்கள் மோசமான செயல்களை செய்கின்றனர்" என்றார்.