Kathir News
Begin typing your search above and press return to search.

தத்தெடுக்கும் குழந்தைகளை மதம் மாற்றும் கும்பல் - கிறிஸ்தவ அனாதை இல்லம் மீது FIR?

தத்தெடுக்கும் குழந்தைகளை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபடுத்தும் கிறிஸ்துவ அனாதை இல்லம்.

தத்தெடுக்கும் குழந்தைகளை மதம் மாற்றும் கும்பல் - கிறிஸ்தவ அனாதை இல்லம் மீது FIR?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Dec 2022 2:22 AM GMT

பரோலில் கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் அனாதை இல்லங்கள் மற்றும் அங்கு வசிக்கும் குழந்தைகளை சட்ட விரோதமாக மதம் மாற்றியதாக அனாதை இல்லத்தின் மீது தற்போது FIR ஒன்று பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மால்டாவை சேர்ந்த தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்ட சீதா என்ற பெயர் கொண்ட இந்து பெண் குழந்தை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படும் வழக்கில் தான் தற்பொழுது இந்த ஒரு தகவல் வெளிவந்து இருக்கிறது.


பரோலி நகர் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றுபவர் ராகுல் என்பவர். அவர் இது குறித்து கூறுகையில், அனாதை இல்லம் இங்கு வசிக்கும் குழந்தைகளின் மதத்தை கட்டாயமாக மாற்றுகிறது. மேலும் அதன் பெயரில் கொடுக்கப்பட்ட FIR பதிவில்தான் தற்பொழுது இந்த ஒரு தகவல் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பரோலியில் உள்ள அனாதை இல்லம் மற்றும் குழந்தைகளை தத்தெடுக்க மால்டாவை சேர்ந்த தம்பதியினர் மீது ஆர்வலர்கள் எஃப்.ஐ.ஆர் ஒன்றில் பதிவு செய்து இருக்கிறார்கள், குழந்தை மால்டாவுக்கு செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இது வெளிவந்து இருக்கிறது.


மேலும் பரோலியை சேர்ந்த ஆர்வலர் அனுஷ்குமார் என்பவரின் புகாரின் பெயரில் இந்த தகவல் தெரிய வந்து இருக்கிறது. அனாதை இல்ல அதிகாரி குழந்தை வளர்ப்பு பெற்றோர் மற்றும் அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக 2021 ஆம் ஆண்டு சட்டவிரதமாக மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அனாதை இல்ல ஊழியர்கள் குழந்தைகளின் நம்பிக்கை மாற்றி, குழந்தைகளுக்கு கிறிஸ்தவ பெயருடன் அவர்களுக்கு புதிய அடையாளத்தை கொடுப்பதாகவும் அவர் தன்னுடைய புகாரில் குற்றம் சாட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Hindu Post News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News