Kathir News
Begin typing your search above and press return to search.

வரலாற்றில் முதல் முறையாக மே மாதத்தில் குவிந்த ஏழுமலையான் காணிக்கை - இத்தனை கோடியா?

திருப்பதி கோவில் வரலாற்றில் முதன்முறையாக ஒரே மாதத்தில் 130 கோடி உண்டியல் வருமானம் பக்தர்களாலே ஏழுமலையானுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக மே மாதத்தில் குவிந்த ஏழுமலையான் காணிக்கை - இத்தனை கோடியா?

Mohan RajBy : Mohan Raj

  |  11 Jun 2022 7:45 AM GMT

திருப்பதி கோவில் வரலாற்றில் முதன்முறையாக ஒரே மாதத்தில் 130 கோடி உண்டியல் வருமானம் பக்தர்களாலே ஏழுமலையானுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க குறிப்பிட்ட அளவே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு காரணத்தினாலும் கோடை விடுமுறை காரணத்தினாலும் திருப்பதியில் வரலாறு காணாத அளவிற்கு கூட்டம் அலைமோதியது.

இதன் காரணமாக கடந்த மே மாதம் மட்டும் உண்டியல் காணிக்கையாக 130 கோடியே 29 லட்சம் ஏழுமலையானுக்கு பக்தர்களால் செலுத்தப்பட்டுள்ளது.


இதுவரை ஒரே மாதத்தில் இவ்வளவு கோடி ரூபாய் வசூலானது வரலாற்றில் கிடையாது! இதுவே வரலாற்றில் முதல் முறை என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தற்பொழுதும் திருமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது இலவச தரிசனத்தில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பி வழிகின்றன சாமி தரிசனத்திற்கு குறைந்தபட்சம் 12 மணி நேரம் ஆகிறது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News