Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ்நாட்டில் பிறக்காத மறத்தமிழன் பிரதமர் மோடி- அண்ணாமலை!

தமிழ்நாட்டில் பிறக்காத மறத் தமிழன் பிரதமர் மோடி என்றும் தமிழின் பெருமையை எடுத்துரைத்தவர் பிரதமர் மோடி தான் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் பிறக்காத மறத்தமிழன் பிரதமர் மோடி- அண்ணாமலை!

KarthigaBy : Karthiga

  |  11 April 2024 2:49 PM GMT

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வந்தடைந்தார். பிரதமர் மோடியை பாஜக மூத்த நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். நீலகிரி, கோவை, திருப்பூர் ,பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்கிறார் .இந்த நிலையில் இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பிறக்காத மறத்தமிழன் பிரதமர் மோடி. தமிழின் பெருமையை கும்மிடிப்பூண்டியை விட்டு தாண்டவிடாமல் செய்தது திமுக தான். ஜனநாயகத்தை பற்றி திமுகவினர் எங்களுக்கு பாடம் எடுக்கக் கூடாது. இந்தியாவிலேயே மோசமான நாடாளுமன்ற உறுப்பினர் உண்டு என்றால் அது ஆ. ராசாதான் .பிரதமர் மோடியை பற்றி தரக் குறைவாக பேசிய ஆ.ராசா நீலகிரியில் டெபாசிட் கூட வாங்க கூடாது .

அடுத்த ஏழு நாட்களை பாஜகவினர் முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். அடுத்து 7 நாட்களை பிரதமருக்காக நாம் அர்ப்பணிப்போம். ஐந்து ஆண்டுகள் நமக்காக பிரதமர் உழைப்பார். மோடியின் வெற்றிக்காக வீடு வீடாக செல்லுங்கள். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :Dinaseithi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News