Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீரில் தீவிரமாகும் வேட்டை - என்கவுண்டரில் இரண்டு தீவிரவாதிகள் பலி

காஷ்மீரில் இரண்டு என்கவுண்டர்களில் நான்கு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் தீவிரமாகும் வேட்டை - என்கவுண்டரில் இரண்டு தீவிரவாதிகள் பலி

KarthigaBy : Karthiga

  |  6 Oct 2022 1:15 PM GMT

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதை அடுத்த அந்த மாவட்டத்தின் டிராச் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சுற்றி வளைத்து தேடும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அதேபோல மாவட்டத்தின் மூலு கிராமத்திலும் நேற்று அதிகாலை தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது மூண்டதுப்பாக்கிச் சண்டையில் டிராச் கிராமத்தில் ஜெய் ஸ்ரீ முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த உள்ளூர் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மூலூ கிராமத்தில் நடந்த என்கவுண்டரில் லஷ்கர்- இ-தொய்பாவை சேர்ந்த ஒரு உள்ளூர் பயங்கரவாதி பலியானார்.


கொல்லப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளில் இரண்டு பேர் கடந்த இரண்டாம் தேதி ஒரு போலீஸ் அதிகாரியும் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு மேற்கு வங்காள தொழிலாளியும் கொல்லப்பட்டதில் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்தனர். குறிப்பிட்ட பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுவதாகவும் அவர்கள் கூறினார். மதிய உள்துறை மந்திரி அமித்ஷா மூன்று நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ள நிலையில் இந்த என்கவுண்டர்கள் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News