Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் ஜி 20 மாநாடு: அசத்தப்போகும் அம்சங்கள் என்ன தெரியுமா?

சுற்றுச்சூழல் பாதிப்பு உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என சென்னையில் நடந்த ஜி20 மாநாட்டில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை செயலாளர் பேசினார்.

சென்னையில் ஜி 20 மாநாடு: அசத்தப்போகும் அம்சங்கள் என்ன தெரியுமா?

KarthigaBy : Karthiga

  |  27 July 2023 5:45 PM GMT

ஜி- 20 சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை மத்திய சுற்றுச்சூழல் வானம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர் லீனா நந்தன் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-


சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் ஜி 20 நாடுகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளன. இந்த ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் உலக நாடுகள் மற்றும் அமைப்புகளுக்கு உதவும்.


பருவநிலை மற்றும் சுற்றுச்சூழலின் சவால்களை எதிர்த்து போராடுவதில் நாம் கொண்டிருக்கும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இது போன்ற மாநாடுகளில் மேற்கொள்ளப்படும் விவாதங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பை வெகுவாக குறைக்க முடியும். சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உலக அளவில் கூட்டாக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் ஒவ்வொரு நாட்டின் பங்களிப்பும் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக ஜி 20 நாடுகளின் சுற்றுச்சூழல் துறை மந்திரிகள் மட்டுமல்லாமல் இதர 15 நாடுகளின் சுற்றுச்சூழல் மந்திரிகள் பங்கேற்கும் மாநாடு நாளை நடக்கிறது. இந்த மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக ஜி-20 சுற்றுச்சூழல் மாநாட்டுக்குழு தெரிவித்துள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News