ஒரே நேரத்தில் 10 நாட்கள் வருகைக்கு கையெழுத்திடும் அரசு மருத்துவ மாணவி - சென்னையிலேயே இப்படியா அப்போ கிராமங்களில்?
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி ஒருவர் பத்து நாட்களுக்கான வருகைப்பதிவை ஒரே நேரத்தில் கையெழுத்திட்ட சம்பவம் குறித்த வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது.
By : Mohan Raj
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி ஒருவர் பத்து நாட்களுக்கான வருகைப்பதிவை ஒரே நேரத்தில் கையெழுத்திட்ட சம்பவம் குறித்த வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி ஒருவர் ஒரே நேரத்தில் 10 நாட்களுக்கான வருகை பதிவை ஒரே நேரத்தில் பதிவேட்டில் கையெழுத்திடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது, தினமும் வந்து முறையாக கையெழுத்திடாத காரணமே இப்படி ஒரே நேரத்தில் கையெழுத்திடுவது போன்று அந்த வீடியோவில் அவர் கையெழுத்திடுவது போன்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து விசாரிப்பதற்கு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் பாலாஜி உத்தரவிட்டுள்ளார், முதுநிலை மருத்துவ மாணவி அப்படி செய்தற்கான காரணத்தை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் வருகைப்பதிவேடுக்காண பயோமெட்ரிக் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என கண்காணிக்கப்படும் எனவும் அவர் கூறினார். அரசு மருத்துவமனைகள் சில மருத்துவர்கள் உரிய நேரத்தில் வருவதில்லை என புகார் எழுந்துள்ளது மேலும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சரியாக பணி புரிவது இல்லை என்ற குற்றச்சாட்டும் மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில் இதுபோன்று வருகை பதிவேட்டில் ஒரே நேரத்தில் 10 நாட்களுக்கான வருகை பதிவு செய்வது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.