தி.மு.க அரசின் வாக்குறுதி எங்கே எனக்கேட்டு பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
By : Karthiga
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும், ஜூலை 1ஆம் தேதியிலிருந்து முடக்கி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை உடனடியாக நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்பது உட்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நேற்று சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர், கழகத்தின் நிறுவன தலைவர் அ.மாயவன் தலைமை தாங்கினார்.
இதில் நிர்வாகிகள் கா சாந்தகுமார், அ. சீனிவாசன், வி.பக்தவச்சலம், தமிழ்வாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தோஷங்களை எழுப்பினர்.