பண்டிகை காலத்திற்காக மத்திய அரசு வெளியிட்ட அருமையான நற்செய்தி!
பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலை எதுவுமே உயராது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
By : Karthiga
நவராத்திரி, தசரா, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் அணிவகுத்து வருகின்றன. இந்த தருணத்தில் சர்க்கரையின் உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு சர்க்கரை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை அக்டோபர் 31-ஆம் தேதிக்கு பிறகு நீட்டித்து மத்திய அரசு நேற்று முன்தின உத்தரவிட்டது. இந்நிலையில் கோதுமை, அரிசி , சர்க்கரை, சமையலெண்ணைய் ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலை நிலையாக இருப்பதை உறுதிப்படுத்த மத்திய அரசு சமீப காலத்தில் சில முடிவுகளை எடுத்துள்ளது.
உணவுப் பொருட்களை இருப்பு வைக்க உச்சவரம்பு நிர்ணயித்தது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தோம். இதனால் பண்டிகை காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விலை தொடர்ந்து சீராக இருக்கும். இயன்ற வகையிலும் அவற்றின் விலை உயராது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு விலை நிலையாக இருக்கும் என்று நம்புகிறோம். 2023 - 2024 சந்தை ஆண்டில் சர்க்கரை ஏற்றுமதி அனுமதிக்கப்படுமா என்று கேட்கப்படுகிறது .கரும்பு உற்பத்தி எவ்வளவு இருக்கும் என்று மதிய வேளாண் அமைச்சகம் மதிப்பீடு செய்த பிறகு அது பற்றி தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SOURCE :DAILY THANTHI