தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி பாக்கி 1200 கோடி மட்டுமே உள்ளது - நிர்மலா சீதாராமன்
தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி பாக்கி 1200 கோடி மட்டுமே உள்ளது என்றும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.17,176 கோடி ஜிஎஸ்டி எழுப்பிட்ட தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் நீதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
By : Karthiga
நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் ஜி. எஸ் .டி இழப்பீடு தொடர்பான கேள்விகளுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி ஆகியோர் நேற்றில் பதில் அளித்தனர். அதன்படி கடந்த ஜூன் மாத நிலவரப்படி மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு ரூபாய் 17,176 கோடி நிலுவையில் இருப்பதாக பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார். பேசும்போது தற்போதைய நிலவரப்படி ஜூன் வரையிலான அனைத்து நிலவைத் தொகைகளையும் ஓரளவு செலுத்தி விட்டால் நிலுவையில் உள்ள 17,000 கோடியும் விரைவில் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டிற்கு ஜூன் 2022 நிலுவையில் உள்ள ஜி.எஸ். டி இழப்பீடு விவரங்கள் ரூபாய் 1200 கோடி மட்டுமே. மாநிலத்தின் பயன்பாட்டு சான்றிதழ் கிடைக்கப்பெறாததால் அதை நிலுவைத் தொகை என கருத முடியாது என தெரிவித்தார்.
இதே போல மத்திய உரத்துறை இணை மந்திரி பக்வந்த் குபா மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இரசாயன கழிவுகளை வெளியேற்றுவது தொடர்பாக மத்திய பிரதேச அரசு அனுப்பிய பரிந்துரையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாக கூறினார். ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தில் சேகரிக்கப்படும் நோயாளியின் தரவுகள் அவர்களது ஒப்புதல் இல்லாமல் காப்பீடு மற்றும் மருந்து நிறுவனங்கள் உட்பட வேறு எந்த நிறுவனத்துடனும் பகிரப்படாது என சுகாதார மந்திரி மன்சுக்குமாண்டவியா உறுதிபட தெரிவித்தார்.