Kathir News
Begin typing your search above and press return to search.

வேதத்தில் இடம் பெற்ற இந்த மூலிகை பற்றிய அரிய தகவல்கள் !

Healthy reason for Neem

வேதத்தில் இடம் பெற்ற இந்த மூலிகை பற்றிய அரிய தகவல்கள் !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 Sep 2021 1:17 AM GMT

பழங்காலத்திலிருந்தே பல்வேறு வகையான மூலிகைகள் தயாரிக்க வேம்பு பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி போன்ற மருந்துகளில் வேம்பு பயன்படுத்தப் படுகிறது. வேம்பு அனைத்து நோய்களையும் தடுக்கும் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் அனைத்து நோய்களையும் குணபடுத்தும் என்பதாகும். வேம்பில் ஆன்ட்டி செப்டிக் மற்றும் ஆன்ட்டி வைரல் பண்புகள் உள்ளன. மேலும், வேம்பு பல நோய்களின் அறிகுறிகளைக் குணப்படுத்துகிறது. இதனால் வேம்பினை மர மருந்தகம் என்றும் அழைக்கின்றனர்.


புற்றுநோயை குணப்படுத்துவதில் வேம்பு பெரிதும் உதவுகிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பைக் குறைக்க வேப்பம் பழங்கள், விதைகள், இலைகள், பூக்கள் என அனைத்தும் உதவுகிறது என்று புற்றுநோய் நிறுவனம் கூறுகின்றது. வேம்பில் உள்ள பூச்சிக்கொல்லி பண்புகள் முடியில் உள்ள பேன் மற்றும் பொடுகு போன்றவற்றை எளிதில் நீக்குகிறது. கூந்தலுக்கு வேப்ப எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் கேசத்தில் உண்டாகும் அரிப்பு பிரச்சினையை தீர்க்க இயலும். வேப்ப இலைகளை உட்கொள்வது இரத்தத்தை தூய்மையாக்குகிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் வைரஸ்களிலிருந்து விடுபட உதவுகிறது.


வேப்ப இலைகள் தோல் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் நீக்குகிறது மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்கிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த வேம்பு இலைகளின் சாற்றை குடிப்பது பயனுள்ளதாக அமையும். வேப்ப இலைகளில் ஆன்ட்டி செப்டிக் மற்றும் ஆன்ட்டி ஃப்பன்ங்கள் பண்புகள் உள்ளன, இது பாக்டீரியாக்களைக் அழிக்கிறது. மேலும், டோனல் ஃப்பன்ங்கஸையும் குணப்படுத்துகிறது. வேப்ப இலைகளை சேர்த்து கொதிக்க வைத்த நீரில் குளிப்பதன் மூலம் பாக்டீரியல் தொற்றுகள் ஏற்படாது. மேலும், தோல் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். வேப்பத்தை காப்ஸ்யூல்களாகவும் பயன்படுத்தலாம்.

Input & image courtesy:Logintohealth



Next Story
கதிர் தொகுப்பு
Trending News