Kathir News
Begin typing your search above and press return to search.

கோவிலில் வணிகத்தனமாக மாற்றுகிறதா அறநிலையத்துறை? நீதிமன்றம் எச்சரிக்கை!

வழிபாட்டு தலமாக இருக்க வேண்டிய கோவில்கள் வணிகத்தனமாக மாற்றுவதை ஏற்க முடியாது.

கோவிலில் வணிகத்தனமாக மாற்றுகிறதா அறநிலையத்துறை? நீதிமன்றம் எச்சரிக்கை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 Oct 2022 2:34 AM GMT

கோவில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமே இருக்க வேண்டும் வணிக தலங்களாக மாற்றப்படுவதை ஏற்க முடியாது என்று மதுரை உயர்நீதிமன்றம் எச்சரித்து விடுத்துள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தான் இந்த ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பல முக்கிய கோவில்கள், மடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கோவில்களில் கோவில்களுக்கு வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் செல்கின்றார்கள்.


இவர்கள் பிரபலமாக கோவில்களுக்கு கோவில்களுக்கான இணையதளம் மூலமாக நன்கொடை வழங்குவதுடன், சிறப்பு பூஜைகளுக்கான முன் அனுமதியும் செய்கின்றார்கள். ஆனால் தற்போது தனி நபர்கள் கோவில் இணையதளத்தை போல வேறு இணையதள வசதிகளை பயன்படுத்தி பத்தர்களை வரவேற்று இலச்சுக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்து வருகிறார்கள். இதனால் வருவாய் இழப்பு உள்ளிட்ட பல்வேறு அதிருப்தி நடவடிக்கைகள் ஏற்படுகிறது.


இவற்றை தவிர்க்க தமிழகத்தில் இந்த சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள், மடங்கள் பெயர்களை போலியாக செயல்படும் இணையதளத்தை மூடக்கவும் அவற்றை இயக்குவோர் இது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், அரசு தரப்பில் கோவில் பெயரில் செயல்பட்ட செயல்பட்ட தனியார் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது என்று தெரியப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் கோவில்கள் வழிபாட்டு தடங்கலாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Input & Image courtesy: Dinakaran

Next Story
கதிர் தொகுப்பு
Trending News